Felix எழுதிய புத்தகம்

கடன் இல்லாத வாழ்க்கை

Debt-Free Life

கடன் என்பது வெறும் பணப்பிரச்சினை அல்ல, அது ஒரு ஆவிக்குரிய பிடி. நீதிமொழிகள் 22:7-ல் சாலொமோன் சொல்வது போல, "கடன்காரன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை." நான் இந்தப் புத்தகத்தை வாசித்து உணர்ந்த உண்மை இதுதான் - கடனிலிருந்து விடுதலை பெறாமல் ஆவிக்குரிய சுதந்திரம் முழுமையாகாது. Felix சகோதரன் சாதாரண வசனங்களைச் சொல்லவில்லை, வாழ்ந்து காட்டிய பாதையைச் சொல்கிறார்.

தற்போதைய கடன்களை முறையாக நிர்வகிக்கவும், முற்றிலும் அழிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்
பணக்கார மனநிலை மற்றும் சேமிப்பின் வேதாகம கோட்பாடுகளை புரிந்துகொள்ளுங்கள்
கடன் அடிமைத்தனத்திலிருந்து நிதி சுதந்திரத்திற்கு செல்லும் நடைமுறை திட்டம்
📞 தொடர்பு: 9892860372

இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்

எனக்குத் தெரிந்த பல குடும்பங்கள் மாத சம்பளம் கையில் வருவதற்குள்ளாகவே EMI-களில் போய்விடும். வீட்டுக் கடன், வண்டிக் கடன், அட்டைக் கடன் - ஒவ்வொன்றும் தனித்தனி சங்கிலி. ஆனால் உபாகமம் 28:12-ல் தேவன் சொல்கிறார், "நீ அநேக ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீ கடன்வாங்க மாட்டாய்." இந்தப் புத்தகத்தில் நான் கற்றது - முதலில் செலவைக் காகிதத்தில் எழுதுவது, பிறகு தேவைக்கும் ஆசைக்கும் இடையே கோடிடுவது, அதற்குப் பிறகு கடன்களை வட்டி அதிகமான வரிசையில் அடைப்பது. இது வெறும் யுக்தி அல்ல, ஒழுக்கம்.

கடனில்லாமல் வாழ்வது சாத்தியமா? ஆம், தேவனுடைய வார்த்தையின்படி கட்டியெழுப்பினால் நிச்சயமாகச் சாத்தியமே. உங்கள் முதல் ரூபாயை இன்று பதிவு செய்யத் தொடங்குங்கள். சிறிய நடைதான் பெரிய வெளியேற்றத்துக்கு வழி.