அந்நியபாஷையின் அவசியங்கள்
Necessities of Speaking in Tongues
பெந்தெகொஸ்தே நாளன்று மேல்வீட்டில் கூடியிருந்த சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியபோது, எல்லாரும் ஒரே நேரத்தில் அந்நிய பாஷைகளில் பேசினார்கள் (அப்போஸ்தலர் 2:4). அது வெறும் சரித்திர நிகழ்வு அல்ல, இன்றைக்கும் நமக்குக் கிடைக்கும் வரம். "நான் பேசி என்ன ஆகப்போகிறது" என்று நினைத்திருந்தேன். ஆனால் 1 கொரிந்தியர் 14:4 தெளிவாய்ச் சொல்கிறது - "அந்நிய பாஷையில் பேசுகிறவன் தன்னைத்தானே பக்திவிருத்தி பண்ணுகிறான்." இந்தப் புத்தகம் என் ஆவியைத் தட்டி எழுப்பியது.
இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்
பவுல் தம்மைப் பற்றிச் சொல்கிறார்: "உங்களெல்லாரிலும் அதிகமாய் நான் அந்நிய பாஷைகளில் பேசுகிறேன்" (1 கொரிந்தியர் 14:18). ஏன் அப்போஸ்தலன் இதை அடிக்கோடிட்டுச் சொன்னார்? ஏனெனில் அந்நிய பாஷை உங்கள் ஆவியை பலப்படுத்தும், ஆவிக்குரிய போரில் ஆயுதமாக நிற்கும். ரோமர் 8:26 நமக்கு ஆறுதல் தருகிறது - "நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருக்கையிலேயே, ஆவியானவரே நமக்காக வேண்டுதல் செய்கிறார்." வார்த்தைகள் வற்றிப் போகும் நேரங்களில் பரிசுத்த ஆவி உங்களுக்காக ஜெபிக்கிறார். இதை Felix சகோதரன் அனுபவத்தோடே விளக்கியிருக்கிறார்.
அந்நிய பாஷை "வேண்டுமானால் எடுத்துக்கொள்" என்ற தனி வரம் அல்ல. ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவை. இன்றே பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள், அவர் தருவார்.
